×

திருவாரூர் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

 

திருத்துறைப்பூண்டி, ஜன. 14: திருவாரூர் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் தொடக்கப்பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளர் ஜெயந்தி தலைமை வகித்தார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ஜோஸ்பின் மேரி வரவேற்றார். மேலும் வட்டார கல்வி அலுவலர்கள் அறிவழகன், பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கம் மற்றும் நினைவு பரிசு வழங்கி பேசினார்கள்.

இதில் மாணவர்களின் சிலம்பம் செய்முறை விளக்க நிகழ்ச்சியை சிலம்பம் தலைமை பயிற்சியாளர் முத்துக்குமரன் செய்து காண்பித்து விளக்கினார். மேலும் பயிற்சி குறித்து பயிற்சியாளர் அனுஷா விளக்கம் அளித்தார். மேலும் தனித்திறமை, தொடும் முறை ஆகிய போட்டியில் 69 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில்12 முதல் பரிசு, 25 இரண்டாம் பரிசு, 22 மூன்றாம் பரிசு பெற்று சாதனை படைத்தனர். அதிக வெற்றிகளை பெற்ற பள்ளிக்கு வெற்றி கோப்பை வழங்கப்பட்டது. விழா முடிவில் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பேசினர்கள்.

The post திருவாரூர் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Thirutharapoondi ,St. Teresa's ,Primary ,School ,Tiruthurapoondi ,Thiruvarur district ,wide ,Silambam competition ,Jayanthi ,Jospin Mary ,Thiruvarur district-wide ,Dinakaran ,
× RELATED வெப்ப அலை வீசி வருவதால்...