×

வள்ளியூரில் மருத்துவமனைக்கு சென்ற வாலிபர் மர்மச் சாவு

நெல்லை, ஜன. 14: வள்ளியூரில் அரசு மருத்துவமனைக்கு சென்ற வாலிபர், மர்மமான முறையில் காட்டுப் பகுதியில் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம் ராதாபுரம்- வள்ளியூர் சாலை பகுதியில் கும்பிளம்பாடு நடுவூர் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி மகன் இசக்கிராஜா(25). இவர். வள்ளியூரில் பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 19ம் தேதி உடல்நிலை சரியில்லை எனக் கூறி வள்ளியூர் அரசு மருத்துமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் திடீரென மாயமானார். இதுகுறித்து 20ம் தேதி வள்ளியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வள்ளியூர் அரசு மருத்துவனைக்கு பின்புறம் மேய்ச்சல் நிலம் உள்ளது. இந்த மேய்ச்சல் நிலத்தில் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு துர்நாற்றம் வீசியது.

இதைத்தொடர்ந்து அங்கு சென்ற அவர்கள், இறந்த நிலையில் கிடந்த வாலிபர் உடலைக் கண்டு வள்ளியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ேபாலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஏற்கனவே மாயமான வாலிபர் மாடசாமி என்றும், உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததும் தெரிய வந்தது. அருகில் விஷபாட்டில் கிடந்தது. இதையடுத்து வாலிபர் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் மாடசாமி, விஷம் குடித்து தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post வள்ளியூரில் மருத்துவமனைக்கு சென்ற வாலிபர் மர்மச் சாவு appeared first on Dinakaran.

Tags : Valliur ,Nella ,Nella District Radhapuram-Valliyur Road Area Kumbilambadu Naduvur ,
× RELATED வள்ளியூரிலிருந்து திசையன்விளைக்கு...