×

செய்யாறு அருகே லோடு ஆட்டோ மோதி 6 பேர் படுகாயம்

செய்யாறு, ஜன.14: செய்யாறு அருகே சாலையோரம் நின்று பேசியபோது லோடு ஆட்டோ மோதி 6 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தேத்துறை கிராமத்தை சேர்ந்தவர் ராமு(54), இவர் தனது நண்பர்களான பூங்காவனம்(62), கார்த்திகேயன்(63), ஞானம்(50), குமார்(55), நாகப்பன்(50) இவர்கள் 6 பேரும் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலை தேத்துறை நிழற்கூடத்தில் உள்ள மழைநீர் வடிகால்வாய் அருகே நேற்று முன்தினம் மாலை பேசிக்கொண்டிந்தனர்.

அப்போது வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற லோடுஆட்டோ திடீரென கட்டுப்பாட்டை இழந்து ராமு உள்ளிட்ட 6 பேர் மீது மோதியது. பின்னர் அருகில் உள்ள பைக் மீது மோதி சேதமானது. இதில் படுகாயமடைந்த 6 பேரும் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து ராமு காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராமு மகன் சந்தோஷ் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ தனபால் வழக்குப்பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவரை தேடிவருகிறார்.

The post செய்யாறு அருகே லோடு ஆட்டோ மோதி 6 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Lodu ,Seiyaru ,Ramu ,Tetura ,Seyyar ,Tiruvannamalai district ,Parkavanam ,Karthikeyan ,Gnanam ,Kumar ,Nagaappan ,Dinakaran ,
× RELATED மாடு வாங்க சென்றவரிடம் ₹87 ஆயிரம் பறிமுதல் பொய்கை வாரச்சந்தையில்