×

ஸ்டவ் மெக்கானிக் கொலை

துரைப்பாக்கம், ஜன.14: விழுப்புரத்தை சேர்ந்தவர் ஏழுமலை (25), காஸ் ஸ்டவ் மெக்கானிக். இவர், திருவான்மியூர் குப்பம் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி சித்ரா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சித்ராவின் தம்பி அண்ணாமலை (22), இவரும் ஏழுமலையுடன் சேர்ந்து வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு இருவரும் வீட்டின் அருகில் அமர்ந்து மது அருந்தினர். அப்போது, போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அண்ணாமலை காய்கறி வெட்டும் கத்தியால் ஏழுமலையின் மார்பில் குத்தியதில் ஏழுமலை உயிரிழந்தார். தகவலறிந்த திருவான்மியூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து அண்ணாமலையை கைது செய்து விசாரிக்கின்றனர்.

The post ஸ்டவ் மெக்கானிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Duraipakkam ,Yehumalai ,Villupuram ,Kuppam ,Thiruvanmiyur ,Chitra ,Annamalai ,
× RELATED பள்ளிகள் திறப்பதற்கு முன்ேப வரும்...