×

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக டாக்காவில் தரையிறங்கிய கவுகாத்தி விமானம்

டாக்கா: அடர்ந்த பனிமூட்டம் காரணமாக கவுகாத்தி செல்ல வேண்டிய விமானம், திடீரென டாக்காவில் தரையிறக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம், அடர்ந்த பனிமூட்டம் காரணமாக இன்று காலை வங்கதேச தலைநகர் டாக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. முன்னதாக கவுகாத்தி விமான நிலையத்தில் அந்த விமானத்தால் தரையிறங்க முடியாததால், கவுகாத்தியில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாக்காவுக்கு திருப்பி விடப்பட்டது.

இதுகுறித்து அந்த விமானத்தில் பயணம் செய்த மும்பை இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சூரஜ் சிங் தாக்கூர் ெவளியிட்ட பதிவில், ‘காங்கிரசின் பாரத் ஜோடோ நியாய யாத்ராவில் பங்கேற்பதற்காக இம்பால் சென்றேன். மும்பையிலிருந்து கவுகாத்தி சென்ற விமானம் டாக்காவுக்கு திருப்பி விடப்பட்டது. தற்போது அனைத்து பயணிகளும், உரிய பாஸ்போர்ட் இல்லாமல் வங்கதேசத்தில் உள்ளோம்’ என்று பதிவிட்டுள்ளார்.

இருந்தும் அந்த விமானம் எதற்காக டாக்காவிற்கு திருப்பி விடப்பட்டது என்பது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் தரப்பில் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post அடர்ந்த பனிமூட்டம் காரணமாக டாக்காவில் தரையிறங்கிய கவுகாத்தி விமானம் appeared first on Dinakaran.

Tags : Dhaka ,Cauwati ,Maharashtra ,Mumbai ,Assam ,Gawati ,Dinakaran ,
× RELATED பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!