×

பொங்கல் பண்டிகையை ஒட்டி உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை காரணாமாக உள்நாட்டு கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிச்சியடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சிகுள்ளாகினர். சென்னை- மதுரை இடையே விமான கட்டணம் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை- மதுரைக்கு வழக்கமாக ரூ.3,367 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.17,262 ஆக உயர்ந்துள்ளது. சென்னை- கோவைக்கு வழக்கமாக ரூ.3,315 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.14,689 ஆக உயர்ந்துள்ளது. சென்னை- சேலம் செல்ல ரூ.2.290 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.11,329 ஆக அதிகரிப்பு. சென்னை- திருச்சிக்கு வழக்கமாக ரூ.2.264 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.11,369 ஆக உயர்ந்துள்ளது.

The post பொங்கல் பண்டிகையை ஒட்டி உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,CHENNAI ,Thoothukudi ,Madurai ,Trichy ,Goa ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...