×

திருமழிசை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்: எம்எல்ஏ பங்கேற்பு

திருவள்ளூர், ஜன. 13: தமிழக அரசின் சார்பில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருமழிசை பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் வடிவேல் திமுக பேரூர் செயலாளர் முனுசாமி, பேரூராட்சி துணை தலைவர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமிற்கு மனு கொடுப்பதற்காக வருகை தந்திருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை அழைத்து குத்துவிளக்கு ஏற்றவைத்து அவரிடம் மனுவை பெற்று உடனடியாக தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பிறகு அங்கு தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடியாக தீர்வுகாணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் திருமழிசை பேரூராட்சிக்கு உட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை விசாரணை செய்து, அந்த மனுக்கள் மீது உடனே நடவடிக்கை மேற்கொண்டு சான்றுகளும் உடனடியாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் திமுக பேரூர் நிர்வாகிகள் நாகதாஸ், செல்வம், வேந்தன், அருள், சுரேந்தர், சங்கர், பன்னீர்செல்வம், பார்த்திபன், ஜான்மேத்யூ, மோகன்ராஜ், நாகராஜ், இளங்கோவன், சண்முகம் சதீஷ், தாமோதரன், வார்டு செயலாளர்கள் வேலு, குமரேசன், கண்ணன், தென்னரசு, பாலமுருகன், வெங்கடேசன், கோகுல கிருஷ்ணன், ஹேம்நாத் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருமழிசை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்: எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Municipality ,MLA ,Tiruvallur ,Government of Tamil Nadu ,Thirumazhisai Municipality ,
× RELATED பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு