×

திருவள்ளூர் நகராட்சி ஆணையராக சுபாஷினி பதவி ஏற்பு

திருவள்ளூர், ஜன. 13: திருவள்ளூர் நகராட்சி ஆணையராக போ.வி.சுரேந்திர ஷா பணியாற்றி வந்தார். இவர் தற்போது நாகப்பட்டினம் நகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்யப்பட்டார். இதேபோல் ஆத்தூர் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சுபாஷினி பணி மாறுதல் செய்யப்பட்டு திருவள்ளூர் நகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நிலையில் திருவள்ளூர் நகராட்சி ஆணையராக சுபாஷினி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் நகராட்சி மேலாளர் சந்திரிகா, சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், நகராட்சி பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் சரவணன், நகரமைப்பு அலுவலர் குணசேகரன், உதவி வருவாய் அலுவலர் கருமாரியம்மன் உதவி திட்ட அமைப்பாளர் விஜயகாந்தன் மற்றும் நகராட்சியின் அனைத்து பிரிவு பணியாளர்களுடன் நகராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்தும் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். மேலும் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

The post திருவள்ளூர் நகராட்சி ஆணையராக சுபாஷினி பதவி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Subashini ,Tiruvallur Municipal Commissioner ,Tiruvallur ,P.V. Surendra Shah ,Municipal Commissioner ,Nagapattinam Municipal Commissioner ,Commissioner ,Attur ,Tiruvallur Municipality ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...