×

சந்தையடியூர் கோயிலில் பால்முறை திருவிழா துவக்கம்

உடன்குடி,ஜன.13: உடன்குடி சந்தையடியூர் தாகம் தணிந்தபதி என்றழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயிலில் மார்கழி, தை மாத பால்முறை திருவிழா துவங்கியது. ஜனவரி 11ம் தேதி உச்சிப்படிப்பு, உகப்படிப்பை தொடர்ந்து மாலை 6 மணிக்கு அய்யா அன்ன வாகன பவனி நடந்தது. நேற்று காலையில் நாக வாகனத்தில் பவனி, மாலையில் தர்மம் எடுத்தல், திருவிளக்கு வழிபாட்டைத் தொடர்ந்து சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள், இரவு 12மணிக்கு அய்யா குதிரை வாகன பவனி நடந்தது. இன்று (13ம் தேதி) உம்பான் தர்மம் வழங்கல், கருட வாகனத்தில் பவனி, நாளை (14ம்தேதி) அய்யா அனுமார் வாகனத்தில் பவனியும், வரும் 15ம் தேதி காலையில் அய்யாவுக்கு பால் வைத்தல், பூஞ்சப்பர பவனி நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

The post சந்தையடியூர் கோயிலில் பால்முறை திருவிழா துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Markshayadiyur ,Ebengudi ,Margazhi ,month ,Sriman Narayanaswamy temple ,Tagam Thaninthapati ,Ebengudi market ,Ayya Anna Vahana Bhavani ,Ukappa ,Marshchyadiyur Temple ,
× RELATED மோடி தலைமையிலான பாஜ அரசை வீட்டுக்கு...