×

தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு வேலைநிறுத்தம் தொடர்பாக 19ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை

சென்னை: பழைய ஓய்வுதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து நடந்தது. கடந்த 9, 10 ஆகிய நாட்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கம் அறிவித்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கை அடுத்து வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வரும் 19ம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. 19ம் தேதி மதியம் 12 மணியளவில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

The post தொழிலாளர் நல ஆணையம் அழைப்பு வேலைநிறுத்தம் தொடர்பாக 19ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Tripartite ,labor welfare commission ,CHENNAI ,Madras High Court ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன்...