×

சென்னை-நாகர்கோவில் இடையே இன்றும், நாளையும் சிறப்பு வந்தே பாரத் ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு வந்தே பாரத் ரயில் இன்று மற்றும் நாளை காலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு மதியம் 1.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறு மார்க்கமாக இன்று, நாளை மதியம் 2.25 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு இரவு 11.25 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும். வரும் 15ம் தேதி திங்கட்கிழமை முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி நேரம் மட்டுமே செயல்படும்.

The post சென்னை-நாகர்கோவில் இடையே இன்றும், நாளையும் சிறப்பு வந்தே பாரத் ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai-Nagarkoil ,Railway ,CHENNAI ,Pongal festival ,Chennai Egmore ,Nagercoil ,Chennai- ,Nagarkoil ,Southern Railway ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: இருவர் கைது