×

24 தேவாலயம், மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் வங்கி மேலாளர் கைது

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள 16 தேவாலயங்கள், 8 மசூதிகளுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்தன. அனைத்து கடிதங்களும் டைப் செய்யப்பட்டு அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள புவியூர் கிராமத்தில் உள்ள மனோகரன், முருகன், செந்தில், பாபு, கிருஷ்ணன் என்ற பெயர்களில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், புவியூர் பகுதியில் விசாரணை நடத்தினர்.
அதில், அங்குள்ள கோயிலில் சிலை வைப்பது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்னை இருப்பதும், இதில் எதிர் தரப்பினரை சிக்க வைக்க புவியூர் பகுதியை சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் கதிரேஷ் (34) வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

The post 24 தேவாலயம், மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல் வங்கி மேலாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kumari district ,Manokaran ,Murugan ,Senthil ,Babu ,Buviyur ,Agastheeswaram ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...