ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் மேலும் ஒரு ஆலையின் மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கழிவுநீரை வெளியேற்றிய புகாரில், அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் ஒரலியம் என்ற ஆலையின் மின் இணைப்பு துண்டித்துள்ளனர். மழைநீர் வடிகால் வழியாக விதிகளை மீறி ரசாயன கழிவு நீரை வெளியேற்றியதாக ஜன.3-ல் கிராம மக்கள் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்த நிலையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
The post பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையில் மேலும் ஒரு ஆலையின் மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு துண்டிப்பு appeared first on Dinakaran.