- பூந்தமல்லி மேற்கு
- யூனியன்
- திமுகா
- ஆலோசனை கூட்டம்
- ஆவதி சா. எம். நாசர்
- சட்டமன்ற உறுப்பினர்
- திருவள்ளூர்
- பூந்தமல்லி வெஸ்ட் யூனியன் டிமுக
- கோடப்பாக்கக்
- தொழிற்சங்க செயலாளர்
- கொத்தியாபாக்கம் டி. தேசிங்கு
- ஈ. கந்தபாபு
- சி. அன்னகுமார்
- ஜே சாக்ரடீஸ்
- ஜி. சுகுமார்
- பி. கண்டன்
- கத்தொட்டி எம். குணசேகரன்
- பூந்தமல்லி வெஸ்ட் யூனியன்
- தின மலர்
திருவள்ளூர்: பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் கூடப்பாக்கத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் கொத்தியாபாக்கம் டி.தேசிங்கு தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் இ.கந்தபாபு, சி.அண்ணாகுமார், ஜெ.சாக்ரடீஸ், ஜி.சுகுமார், ப.கந்தன், கட்டதொட்டி எம்.குணசேகரன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகிகள் குணா, பிரவீன், டி.மணிவண்ணன், எம்.உதயா, ஹரிகாரன், ராஜேஷ், கார்த்திக் மற்றும் இ.வி.பி.பிரதீப், தியாகராஜன், சிபி, கார்த்தி வரவேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ பேசுகையில், வருகிற 21ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி 2 து மாநில மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கினார். மேலும் மாநில மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைத்து இளைஞர்களுக்கும் சீருடைகளை வழங்கினார். கூட்டத்தில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, நகர செயலாளர் என்.இ.கே.மூர்த்தி, பகுதி செயலாளர் ஜி.நாராயண பிரசாத், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.சுரேஷ்குமார், மாவட்ட இளைஞர் துணை அமைப்பாளர்கள் ஆர்.செந்தாமரை, ஜி.சி.சி.கருணாநிதி, வி.ஜெ.உமா மகேஸ்வரன், அக்னி ராஜேஷ், டி.பிரியாகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டம்: ஆவடி சா.மு.நாசர் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.