×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!!

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொங்கல் விடுமுறையை முன்னிட்டு 2024 ம் ஆண்டு ஜனவரி 15 (திங்கட்கிழமை), 16 (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17 (புதன்கிழமை) ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமையின் அட்டவணையின் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

1. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

2. காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

3. மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

4. இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகை நாட்களில் கூட்டம் குறைவாக இருக்கும் என்பதால், ஞாயிறு அட்டவணைப்படி ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் “என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai Metro Rail Service ,Pongal Festival ,Chennai ,Chennai Metro train service ,Chennai Metro Rail Administration ,Pongal holiday ,Pongal Festival! ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா