×

புதுச்சேரியில் பொங்கல் பரிசுக்கு கூடுதலாக ரூ.250 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் பரிசுக்கு கூடுதலாக ரூ.250 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். இதனிடையே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலமாக வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரூ. 500 வழங்கும் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 8ம் தேதி ஒப்புதல் அளித்தார்.

அரசு ஊழியர்கள், கெளரவ அட்டைதாரர்கள் அல்லாத அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரூ.500 தரப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொங்கல் சிறப்பு பொருட்களுக்கு ஈடாக 16 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரத்து 500 ரூபாய் வங்கி கணக்கில் நேற்று செலுத்தப்பட்டது. இதன் மூலம், மாநிலத்தை சேர்ந்த மொத்தம் 3 லட்சத்து 38 ஆயிரத்து 761 ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைவர்.

இந்நிலையில், புதுச்சேரியில் பொங்கல் பரிசுக்கு கூடுதலாக ரூ.250 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ரூ.500 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக ரூ.250 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது.

The post புதுச்சேரியில் பொங்கல் பரிசுக்கு கூடுதலாக ரூ.250 வழங்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangaswamy ,Puducherry ,Rangasamy ,Pongal ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி