×

மேட்டுப்பாளையம் – உதகை இடையே 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது..!!

நீலகிரி: கனமழை எச்சரிக்கை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உதகை மலை ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பெய்த கனமழை காரணமாக உதகை ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்த காரணத்தால் ரயில் பாதை சேதமடைந்தது. இதன் காரணமாக ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பயணிகள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை ரயில் ரத்து செய்யப்படுவதாக அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

இதனால் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை மலை ரயில் சேவை வரும் டிசம்பர் கடந்த 2 நாட்கள் வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால், மேலும், ரயில் பாதையில் ஏற்பட்ட இருந்த மண் மற்றும் பாறைகள் அகற்றப்பட்டு பாதை சீரமைக்கப்பட்ட காரணத்தால் இன்று முதல் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் 180க்கு மேற்பட்டவர்கள் மகிழ்ச்சியாக பயணம் செய்தனர்.

The post மேட்டுப்பாளையம் – உதகை இடையே 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Matuppalayam ,Kudkai ,Upadai Mountain train service ,Upakai ,MTUPPALAYAM ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி...