சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அவரது நீதிமன்ற காவலை வருகிற 22-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14-ல் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. 3-வது முறையாக ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வாதங்கள் முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கிறது. இதற்கிடையில், செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த ஆக. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதன்பிறகு, அவருக்கு ஜாமீன் கோரி 2 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், 3-வது முறையாக ஜாமீன் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்படுகிறது.
The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்! appeared first on Dinakaran.