×

சூரியூரில் 16ம்தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம்

 

திருவெறும்பூர், ஜன.12: திருவெறும்பூர் அருகே சூரியூரில் வரும் 16ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நிலையில் விழா மேடை, பேரிகார்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருளான பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீநற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.

இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியின் சார்பில் பரிசு பொருட்கள் பிரம்மாண்டமாக வழங்கப்படும்.

இந்தஆண்டு வரும் 16ம் தேதி (தை 2ம்நாள்) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடாக விழா மேடை மற்றும் பேரிக்கார்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளை சூரியூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் விஜி ஆறுமுகம், சூரியூர் அழகர், சாமிநாதன் பிள்ளை, மீனாட்சி சுந்தரம் ஐயர், முருகன், செந்தில் குமார் ஆகியோர் மேற்பார்வை செய்து வருகின்றனர்.

The post சூரியூரில் 16ம்தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Suriyur ,Tiruverumpur ,Suriur ,
× RELATED திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்...