×

பொன்னமராவதி அருகே நல்லூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

 

பொன்னமராவதி,ஜன.12: பொன்னமராவதி அருகே உள்ள நல்லூரில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. நல்லூர் ரேஷன் கடையில் ஊராட்சி தலைவர் ராமையா பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார். இதில் ஒன்றியக்கவுன்சிலர் பழனியப்பன், முன்னாள் ஊராட்சி தலைவர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல செவலூர் ஊராட்சி மலையடிப்பட்டியில் ஊராட்சி தலைவர் திவ்யா முத்துக்குமார் பொங்கல் தொகுப்பு வழங்கினார்.

கோவணூரில் ஊராட்சி தலைவர் ராமசாமி, இடையாத்தூரில் ஊராட்சி தலைவர் ராமன், கூடலூரில் தலைவர் தங்கமணி முருகன், கொன்னையம்பட்டியில் தலைவர் மாரிக்கண்ணுபிச்சன், மேலைச்சிவபுரியில் தலைவர் மீனாள் அயோத்திராஜா ஆகியோர் தமிழக அரசின் பொங்கல் தொகுப்புகளை வழங்கினர். இதில் அங்காடி பணியாளர்கள், ஊராட்சி துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், கூட்டுறவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பொன்னமராவதி அருகே நல்லூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Nallur ,Ponnamaravati ,Tamil Nadu government ,Panchayat ,president ,Ramaiah ,Union Councilor Palaniappan ,
× RELATED பொன்னமராவதி குப்பைக் கிடங்கில்...