×

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு புதுகை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

 

புதுக்கோட்டை,ஜன.12: புதுக்கோட்டை ஸ்ரீஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை தெற்கு 4ம் வீதியில் பெரிய மார்க்கெட் பகுதியிலுள்ள உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காலையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பல்வேறு வீதி வழியாக ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்தனர்.

பின்னர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவசம் வடை மாலை அலங்காரத்தில் மகா தீபாரதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கோயிலில் உற்சவர் ராமர், சீதா, லெட்சுமணர், உற்சவர் ஆஞ்சநேயர், வராகி அம்மன், நரசிம்மர், ஹயக்கிரிவர்க்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. பின்னர் உற்சவர் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வீதி வழியாக பவனி வந்தார். இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டனர். அனைவருக்கும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.

The post அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு புதுகை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Pudukai ,Anjaneyar ,Temple ,Hanuman Jayanti ,Pudukottai ,Sri Anjaneyar Temple ,Pudukottai South 4th Street, Periya Market ,Anjaneyar Temple ,Pudukaya ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி