×

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

 

அவிநாசி, ஜன.12:அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்க கல்வித்துறையில் பணியாற்றக்கூடிய 90 சதவீத ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பறிக்கக்கூடிய மாநில உரிமையை வலியுறுத்தி,அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

2023 அக்டோபர் 12ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,பள்ளி கல்வி இயக்குநர்,தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் டிட்டோ ஜாக் உயர்மட்ட குழு உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பான ஆணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெள்ளியங்கிரி, தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை நடராஜ் வரவேற்பு உரையாற்றினார். இதனை தொடர்ந்து ரமேஷ் குமார், செந்தில்குமார், ராமகிருஷ்ணன், சுசிலா, ஜெயலட்சுமி, ராஜேந்திரன் உள்ளிட்டு கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். தனபால் நன்றி கூறினார்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Avinasi ,Avinasi New Bus Station ,
× RELATED பேருந்துகள் நிற்காமல் செல்வதை...