- ஆசிரியர்கள் கூட்டணி நிர்வாகக்
- சிவகங்கை
- தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டணி
- மாவட்ட துணைத் தலைவர்
- ரவி
- மாநில துணைத் தலைவர்
- ஆரோக்கியராஜ்
- மாநில நிர்வாகக் குழு
- பிரச்சிதத்தம்பி
- மாவட்ட செயலாளர்
- ஆசிரியர் கூட்டணி பணிக் குழு
- தின மலர்
சிவகங்கை, ஜன.12: சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் ரவி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன் மொழிந்து பேசினார்.
மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஞான அற்புதராஜ், குமரேசன், மாவட்ட துணை செயலாளர்கள் ஜான்அந்தோணி, அமலசேவியர், ஜீவாஆனந்தி, கல்வி மாவட்ட செயலாளர்கள் சிங்கராயர், சகாய தைனேஸ், ஜெயக்குமார், கல்வி மாவட்ட தலைவர் ஜோசப் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 90 சதவீதத்திற்கு மேல் பாதிப்புக்குள்ளாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.