- திருக்குறள்
- பொருளாதார குற்றப்பிரிவு
- மதுரை
- பொருளாதார குற்றங்கள் போலீஸ்
- ஷேக் முகைதீன்
- பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன்
- பீபிகுளம், மதுரை...
- தின மலர்
மதுரை, ஜன. 12: திருக்குறள் புத்தக மோசடியில் பாதிக்கப்பட்டோர் புகாரளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்தவர் ஷேக் முகைதீன். இவர் மதுரை பீபீகுளத்தை தலைமையிடமாகக் கொண்டு பாராமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேசன் என்ற நிதி நிறுவனத்ைத நடத்தினார். இந்த நிறுவனத்தின் சார்பில் திருக்குறள் புத்தகங்களை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு திரும்ப கொடுப்பதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது.
மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசின் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பின்னர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை தற்போது மதுரை பொருளாதார குற்றங்களுக்கான முதலீட்டாளர் நல நீதிமன்றத்தில் (டான்பிட்) நடந்து வருகிறது. ஏற்கனவே
துவக்க கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஷேக் முகைதீன் மற்றும் நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டோருக்கு பணத்தை திரும்ப கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐகோர்ட் உத்தரவுப்படி இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல செய்யப்படவுள்ளது. இதற்காக பாதிக்கப்பட்டோர் மற்றும் ஏற்கனவே மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தோர் உள்ளிட்டோர் வரும் பிப்.15க்குள் மீண்டும் பொருளாதார குற்றப்பிரிவில் புகாரளிக்கலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post திருக்குறள் புத்தக மோசடியில் பாதிக்கப்பட்டோர் புகார் தரலாம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் appeared first on Dinakaran.