×

அரசு ஊழியர் வீட்டில் ரெய்டு

திங்கள்சந்தை: குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள நேதாஜிநகரை சேர்ந்தவர் குமாரதாஸ் (47). இவர் நாகர்கோவிலில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குமாரதாஸ், அவரது மனைவி சுஜாதா (44) ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று குமாரதாஸ் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் வரை செலவினங்களுக்கான பல்வேறு ரசீதுகள், 6 நில பத்திரங்கள், 4 வங்கி பாஸ் புத்தகங்கள் மற்றும் நகை அடமான ரசீதுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

The post அரசு ஊழியர் வீட்டில் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Raid ,Kumaradas ,Netajinagar ,Iranial ,Kumari district ,Assistant Director of ,Nagercoil ,Sujatha ,Dinakaran ,
× RELATED ரெய்டு நடத்தி ‘பே பிஎம்’ வசூல்...