- சென்னை
- கோயம்புத்தூர்
- தெற்கு ரயில்வே
- பொங்கல்
- பொங்கல் திருவிழா
- சென்னை-கோயம்புத்தூர்-
- -கோயம்புத்தூர் பொங்கல்
- தெற்கு
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை-கோவை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை-கோவை-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி ஜன.16, 17ம் தேதிகளில் கோயம்புத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்.06086) இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. தாம்பரத்தில் இருந்து 17, 18ம் தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடைகிறது.
இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் வழியாக தாம்பரம் வந்து சேருகிறது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. இந்த சிறப்பு ரயிலில் 12 ஏசி மூன்றாம் பெட்டிகள், 2 படுக்கை வசதி பெட்டிகள், 2 பொது பெட்டிகள் இடம்பெற்றுள்ளது. அதேபோல், பெங்களூரு-திருச்சி இடையே சிறப்பு ரயில் நாளை இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெங்களூருவில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு திருச்சி வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்சியில் இருந்து 12ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு பெங்களூருக்கு பகல் 12 மணிக்கு சென்றடைகிறது. இந்த சிறப்பு ரயில், பங்கார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி கோட்டை வழியாக செல்கிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
The post சென்னை-கோவைக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.