×

கனிமொழி எம்பி பிறந்தநாள் முன்னிட்டு முன்கள பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்

தண்டையார்பேட்டை: மூலக்கொத்தளத்தில் கனிமொழி எம்பி பிறந்தநாள் முன்னிட்டு 500 முன்கள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பிறந்த நாளை முன்னிட்டு 53வது வார்டு மாமன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி ஏற்பாட்டில் முன்கள பணியாளர்கள் மற்றும் வட்ட நிர்வாகிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ராயபுரம் மூலக்கொத்தளத்தில் நேற்று நடந்தது. சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா தலைமை வகித்தார். பகுதி செயலாளர் வா.பேசுரேஷ் முன்னிலை வகித்தார்.

இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு, முன்கள பணியாளர்கள் மற்றும் வட்ட நிர்வாகிகள் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அமைச்சர் பேசுகையில், மற்ற கட்சியில் உத்தரவிடுபவர்கள் குளிர்சாதன அறைக்குள் இருப்பார்கள். களத்தில் இருப்பவர்கள் தொண்டர்கள் மாத்திரம்தான். ஆனால் திமுகவை பொறுத்தவரை உத்தரவிடுபவர் களத்தில் இருப்பார், தொண்டரும் களத்தில் இருப்பார், இதுதான் திமுக.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. மக்கள் தேவைகளை சிறப்பாக செய்து வருகிறார்” என்றார். இதில், மகளிர் ஆணைய தலைவர் குமரி விஜயகுமார், ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, மண்டலக்குழு தலைவர் ஸ்ரீராமுலு, தலைமை செயற்குழு உறுப்பினர் கருணாநிதி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் சக்திதாசன், சிலம்பரசன், வட்ட செயலாளர்கள் கவுரீஸ்வரன், பாலலட்சுமணன் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post கனிமொழி எம்பி பிறந்தநாள் முன்னிட்டு முன்கள பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சேகர்பாபு வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Minister ,Shekharbabu ,Thandaiyarpet ,PK Shekharbabu ,Moolakothalam ,DMK ,Deputy General Secretary ,53rd ,Ward ,Member of Parliament ,Velankanni ,Shekhar Babu ,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...