அரூர், ஜன.11: மொரப்பூர் அடுத்த எலவடை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்(37). இவர் மொரப்பூர்- கல்லாவி சாலையில் கோழிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 30ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டு, மறுநாள் கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே வைத்திருந்த ₹7 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சக்திவேல், மொரப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கோழிக்கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு appeared first on Dinakaran.