×

ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி பாக். உச்ச நீதிமன்ற நீதிபதி நக்வி ராஜினாமா

இஸ்லாமாபாத்: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதி சையத் மஹர் அலி அக்பர் நக்வி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்து வந்த சையத் மஹர் அல் அக்பர் நக்வி பின்னர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் மீது கடந்த ஆண்டு நிதி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு சையத் மஹர் அலிக்கு உச்ச நீதிமன்ற அமர்வு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்ற ஒழுங்குமுறை நடவடிக்கை குழு மறுத்து விட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் ஆரிப் அல்விக்கு சையத் மஹர் அலி அக்பர் நக்வி எழுதியுள்ள கடிதத்தில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

The post ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி பாக். உச்ச நீதிமன்ற நீதிபதி நக்வி ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Pak ,Supreme Court ,Justice ,Naqvi ,ISLAMABAD ,Supreme Court of Pakistan ,Syed Mahar Ali Akbar Naqvi ,Syed Mahar Al Akbar Naqvi ,Lahore High Court ,Dinakaran ,
× RELATED உச்சநீதிமன்ற வழக்கு விவரங்கள் இனி...