×

மது குடித்ததை தட்டிக்கேட்டதால் பெயின்டருக்கு பீர்பாட்டில் குத்து: 2 பேர் கைது: ஒருவருக்கு வலை


பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 7வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் அருள் (54). இவர் பெயின்டர். நேற்றுமுன்தினம் தனது வீட்டில் டிவியில் படம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது 3 பேர் அவரது வீட்டின் அருகே நின்று மது அருந்தியுள்ளனர். இவற்றை அருள் தட்டிக்கேட்டபோது அந்த 3 பேரும் சேர்ந்து தாங்கள் வைத்திருந்த பீர்பாட்டிலால் அருளை சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த அருளை அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின்படி, வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வியாசர்பாடி ஏ.கல்யாணபுரம் 2வது தெருவை சேர்ந்த ராகுல்ராஜ் (எ) கேப்ராஜ் (24), சரண் (23) ஆகியோரை கைது செய்தனர். இதுசம்பந்தமாக மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post மது குடித்ததை தட்டிக்கேட்டதால் பெயின்டருக்கு பீர்பாட்டில் குத்து: 2 பேர் கைது: ஒருவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Painter ,Perambur ,Arul ,7th block ,Vyasarpadi Sathyamurthy Nagar, Chennai ,Birbat ,
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை