- திருச்சி
- கலெக்டர்
- பிரதீப் குமார்
- தமிழ்நாடு பொது சேவை ஆணையம் குழு -4
- திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல்
- தின மலர்
திருச்சி. ஜன.10: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் குரூப்-4க்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்றுமுதல் துவங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தகவல் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் 2024ம் ஆண்டு திட்ட நிரவலின்படி குருப்-4 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பாணையினை எதிர்நோக்கி உள்ளனர். மாற்றுத்திறனாளி போட்டித்தேர்வர்கள் பயன்பெறும் வகையில், சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் திருச்சி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தில் இன்று(ஜன.10) முதல் காலை 10 மணிளவில் தொடங்கப்படவுள்ளது.
இதில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் குருப்-4 தேர்விற்கான அனைத்துப் பாடப்பகுதிகளுக்கும் வகுப்பெடுப்பதுடன், பாடவாரியாக மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். ஆகவே, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாற்றுத்திறனாளி போட்டித் தேர்வர்களும் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயனடையும்படியும், இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக தொலைபேசி எண் 0431-2413510, 9499055901, 9499055902 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தொிவிக்கபட்டுள்ளது.
The post பனிப்பொழிவுடன் நீடித்த சாரல் மழை போட்டி தேர்வுக்கு இன்றுமுதல் பயிற்சி வகுப்புகள் துவக்கம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.