×

மாவட்டத்தில் உள்ள 549 பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்படும்: மண்டல பொதுமேலாளர் தகவல்

 

திருப்பூர், ஜன.10: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல பொதுமேலாளர் மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சில தொழிற்சங்கங்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், திருப்பூர் மண்டலம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. தொமுச தொழிற்சங்கம் மற்றும் இதர தொழிற்சங்கத்தை சார்ந்த ஓட்டுநர், நடத்துனர் வைத்து முழுமையாக பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

வேலை நிறுத்தம் தொடரும் பட்சத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பயிற்சி பெற்ற வெளி ஓட்டுனர்களின் பட்டியல் பெற்று அனைத்து பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தேவைப்படும் பட்சத்தில் ஓய்வு பெற்ற ராணுவ ஓட்டுனர்களை வைத்து இயக்கவும் மற்றும் காவல்துறை சார்பாக உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டம் திருப்பூர் மண்டலம் சார்பாக பொது மக்களுக்கு இடையறின்றி அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மண்டலத்தில் வழக்கம் போல் இன்று அரசு பேருந்துகள் இயக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் நாளை 254 நகர்புற பேருந்துகளும் 295 புறநகர் பேருந்துகளும் மொத்தம் 549 பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்படும். திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூறின்றி வழக்கம் போல் பேருந்துகள் இயக்கிட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

The post மாவட்டத்தில் உள்ள 549 பேருந்துகளும் வழக்கம் போல் இயக்கப்படும்: மண்டல பொதுமேலாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Zonal General Manager ,Tirupur ,Tamil Nadu Government Transport Corporation ,Regional General Manager ,Mariyappan ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...