×

தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பம்

 

சிவகங்கை, ஜன.10: காளையார்கோவில் அருகேயுள்ள திறந்த வெளிச்சிறையில் தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மத்திய சிறை, சிறை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மதுரை மத்திய சிறை கட்டுப்பாட்டிலுள்ள, சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா, புரசடைஉடைப்பு திறந்தவெளிச்சிறையில் தூய்மை பணியாளர் பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடம் பி.சி பிரிவிற்கு இன சுழற்சி அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

1.7.2022அன்று குறைந்தபட்சம் வயது 18ஆகவும், அதிகபட்ச வயது ஓசி 32, பி.சி, எம்.பி.சி 34, எஸ்.சி, எஸ்.டி 37ஆகும். முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பு இல்லை. குறைந்தபட்சம் தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். தகுதியான நபர்கள் கல்வி சான்று, சாதிச்சான்று மற்றும் பிற சான்றுகளின் நகல்களுடன் விண்ணப்பத்தை சிறை கண்காணிப்பாளர், மத்திய சிறை, மதுரை.16 என்ற முகவரிக்கு 25.1.2024க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தூய்மை பணியாளர் பணிக்கு விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Kalayarkovil ,Prisons ,Madurai Central ,Jail ,Madurai Central Jail ,Sivagangai District ,Kalaiyarko ,
× RELATED காளையார்கோவில் பகுதியில் காவிரி...