×

ஏற்காட்டில் 22.8 மி.மீட்டர் மழை

சேலம், ஜன. 10: வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்று சேலம் மாவட்டத்தில் காலையில் இருந்தே சாரல் மழை பெய்தது. ஏற்காட்டில் நேற்று முன்தினம் முதல் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. பனி மூட்டத்தால் சிறது தூரத்தில் வரும் வாகனங்கள் கூட தெரியாததால் வாகன ஒட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். நேற்று முன்தினம் ஏற்காட்டில் 22.8 மி.மீட்டர் மழை பெய்தது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலை பெய்த மழையளவு விவரம் (மி.மீட்டரில்): ஏற்காடு- 22.8, இடைப்பாடி-16, தலைவாசல்-15, தம்மம்பட்டி-12, கரியகோவில்-12, ஆணைமடுவு-6, சங்ககிரி-2.2, ஆத்தூர், ஒமலூர்-1 னெ மொத்தம் 88 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

The post ஏற்காட்டில் 22.8 மி.மீட்டர் மழை appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Salem ,Tamil Nadu ,Salem district ,Dinakaran ,
× RELATED ஏற்காடு விபத்து: காயம் அடைந்தோருக்கு இபிஎஸ் ஆறுதல்