×

தொடரை வென்றது ஆஸ்திரேலியா

மும்பை: இந்திய மகளிர் அணியுடன் நடந்த 3வது டி20போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன் குவித்தது. ரிச்சா கோஷ் அதிகபட்சமாக 34 ரன் (28 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். மந்தனா 29, ஷபாலி 26, தீப்தி ஷர்மா 14 ரன் எடுக்க, ஜெமிமா 2, கேப்டன் ஹர்மன்பிரீத் 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அமன்ஜோத் கவுர் 17 ரன், பூஜா வஸ்த்ராகர் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் அன்னபெல், ஜார்ஜியா தலா 2, மேகான் ஷுட், கார்டனர் தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து 20 ஓவரில் 148 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. கேப்டன் அலிஸ்ஸா – பெத் மூனி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 10 ஓவரில் 85 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். அலிஸ்ஸா 55 ரன் (38 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), தஹ்லியா 20 ரன் எடுத்து அவுட்டாகினர். பெர்ரி டக் அவுட்டானார். ஆஸி. அணி 18.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்து வென்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பெத் மூனி 52 ரன், லிட்ச்பீல்டு 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

The post தொடரை வென்றது ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.

Tags : Australia ,Mumbai ,T20I ,India Women ,TY Patil Arena ,India… ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...