×

5 மாநிலங்களில் சீட் கேட்கிறது ஆம்ஆத்மி: காங்கிரசுடன் விரைவில் தொகுதி பங்கீடு

புதுடெல்லி: டெல்லி, பஞ்சாப் தொகுதி பங்கீடு கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் அரியானா, கோவா, குஜராத்திலும் சீட் ஒதுக்கும்படி காங்கிரஸ் கட்சியிடம் ஆம்ஆத்மி கோரிக்கை விடுத்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 4ல் ஆம்ஆத்மியும், 3ல் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதே போல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளில் 6 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்க ஆம்ஆத்மி சம்மதம் தெரிவித்தது. இந்த நிலையில் குஜராத், அரியானா, கோவாவில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சி சில இடங்களை கோரியுள்ளது. அதாவது குஜராத்தில் ஒரு தொகுதியும், அரியானாவில் 3 தொகுதியும், கோவாவில் ஒரு தொகுதியையும் ஆம் ஆத்மி கேட்டுள்ளது. 5 மாநிலங்களில் ஆம்ஆத்மி சீட் கேட்பது தொடர்பாக அடுத்த கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post 5 மாநிலங்களில் சீட் கேட்கிறது ஆம்ஆத்மி: காங்கிரசுடன் விரைவில் தொகுதி பங்கீடு appeared first on Dinakaran.

Tags : AAP ,Congress ,New Delhi ,Aam Aadmi Party ,Congress party ,Haryana ,Goa ,Gujarat ,Delhi ,Punjab ,India ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் இன்று சுனிதா கெஜ்ரிவால் பிரசாரம்