×

துரோக்கத்துக்கு என ஒரு ‘எம்பளம்’ வைத்திருப்பவர் எடப்பாடி சாயம் வெளுக்கும்: டிடிவி.தினகரன் பேச்சு

ஈரோடு: ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் அமமுக தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது: கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி அமையாமல் போனதற்கு காரணம் அனைவருக்கும் தெரியும். அப்போது தனித்து போட்டியிட்டோம். உண்மை ஒருநாள் வெளிவரும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு சரியாக பொருந்துகிறது. உழைத்து மேலிடத்துக்கு வந்தேன் என்றுதான் அனைவரும் கூறுவர். ஆனால், தவழ்ந்து, தவழ்ந்து முதலமைச்சர் ஆனதாக அவர் உண்மையை ஒப்புக்கொண்டு இருக்கிறார். முதலை தான் தவழ்ந்து வரும். அவருக்கு பதவி கொடுத்தவரையே யார் அந்த சசிகலா ? என கேட்டவர் எடப்பாடி பழனிசாமி. உலக அரசியல் வரலாற்றிலேயே துரோக்கத்துக்கு என ஒரு ‘எம்பளம்’ வைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி தான். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் சாயம் வெளுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

* அந்த ரகசியத்தை சொல்லுங்க ஓபிஎஸ்…
டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில்,“நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசி கொண்டுள்ளோம். நல்ல கூட்டணியில் இடம் பெறுவோம். பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அணிலை போல இருப்போம். எடப்பாடி பழனிசாமி ஏமாற்றியே பிழைப்பு நடத்துவார். வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று தெரிந்தும் கையெழுத்து போட்டார். அதேபோல, எடப்பாடி பழனிசாமியின் வேஷம் சிறுபான்மையினருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமியை சிறைக்கு அனுப்பும் ரகசியம் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருப்பதாக தெரிவித்து உள்ளார். அது அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். நானும், ஓ.பன்னீர்செல்வமும் நண்பர்கள். ரகசியத்தை அவராக என்னிடம் சொல்ல வேண்டும். நானாக கேட்டால் நன்றாக இருக்காது. என்னிடம் சொன்னால் நானே உங்களிடம் சொல்லி விடுவேன்’’ என்றார்.

The post துரோக்கத்துக்கு என ஒரு ‘எம்பளம்’ வைத்திருப்பவர் எடப்பாடி சாயம் வெளுக்கும்: டிடிவி.தினகரன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DTV.Thinakaran ,Erode ,AAMUK Constituency ,Tirupur ,AAMUK ,General Secretary ,TTV Dinakaran ,DTV ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...