×

மாவோயிஸ்ட்டுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டவர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம் கீழமுன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (47). இவர் ஆன்லைனில் பதிவுகளை எழுதி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறந்த ஒரு பெண்ணிற்கு அஞ்சலி செலுத்துவதற்கான பதிவை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் மாவோயிஸ்ட்டுக்கு ஆதரவான கருத்துக்களையும், வன்முறையை தூண்டும் விதமாகவும் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் மத்தியில் வன்முறையை தூண்டுதல், பொதுஅமைதியை சீர்க்குலைக்கும் விதமாக நடந்து கொள்ளுதல், அவதூறான கருத்துக்களை பரப்புதல் என 3 பிரிவுகளின் கீழ் பிரேம்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து ஜேஎம் 5ம் எண் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மாவோயிஸ்ட்டுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டவர் கைது appeared first on Dinakaran.

Tags : Maoist ,Nellai ,Premkumar ,Keemamunneerpallam ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...