×

கோத்தகிரியில் கடந்த 2014ம் ஆண்டு ரூ.4000 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கடந்த 2014ம் ஆண்டு ரூ.4000 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியர் ஜெயபிரகாஷ் மீதான வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து உதகை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வீடு கட்ட தடையாக இருந்த மின் கம்பியை அப்புறப்படுத்த விண்ணப்பித்தவரிடம் லஞ்சம் பெற்றதாக ஜெயபிரகாஷ் கைதானார்.

The post கோத்தகிரியில் கடந்த 2014ம் ஆண்டு ரூ.4000 லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kotagiri ,Nilgiri ,Nilgiri District Court ,Jaiprakash ,Kothagiri district ,Gothagiri ,
× RELATED கோத்தகிரி லாங் வுட் சோலையில் இயற்கை முகாம்