சென்னை: கல்வி, வேலைவாய்ப்பில் 3-ம் பாலினத்தவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன்கார்டு மற்றும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
உச்சநீதிமன்ற உத்தரவு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி தூத்துக்குடியை சேந்த கிரேஸ் பானு கணேசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
The post கல்வி, வேலைவாய்ப்பில் 3-ம் பாலினத்தவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்: ஐகோர்ட் appeared first on Dinakaran.