×

வாணியம்பாடி அருகே 8-ம் வகுப்பு மாணவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே 8ம் வகுப்பு மாணவன் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரஜினிகாந்த். இவரது மகன் கோபிநாத். இவர் கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி கோபிநாதுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது பெற்றோர்கள் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கே 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அங்கே 2 மணி நேரம் சிகிச்சை அளித்த பின்னர் மாணவனை அவரது பெற்றோர்கள் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கே மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியான நிலையில் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று விடியற்காலை கோபிநாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். மாணவன் உயிரிழந்ததை தொடர்ந்து ஊராட்சி சார்பில் அப்பகுதியில் சுகாதார பணியாளர்கள் துய்மை பணிகள் மேற்கொண்டனர். பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

The post வாணியம்பாடி அருகே 8-ம் வகுப்பு மாணவன் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Vaniyambadi ,Tirupattur ,Vaniyampadi ,Rajinikanth ,Annanagar ,Tirupathur district ,Gopinath ,Kirisamuthram ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...