மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்து சமூகத்தினர் ஒன்றிணைத்து கமிட்டி அமைக்கக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தையை முழுமையாக வீடியோ பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு அனைத்து தரப்பினரையும் முறையாக அழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த முனியசாமி உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர்.
The post அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்காக அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஐகோர்ட் கிளை ஆணை..!! appeared first on Dinakaran.