×

ஓட்டலில் மீந்து போன கோழி இறைச்சி, புரோட்டா பறிமுதல்

பள்ளிபாளையம் : பள்ளிபாளையம் அருகே ஓட்டலில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரி, விற்பனைக்கு வைத்திருந்த 10 கிலோ பழைய இறைச்சி, புரோட்டா ஆகியவற்றை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தார்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரங்கநாதன், நேற்று அக்ரஹாரம் பகுதியில் உள்ள 2 ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது சிறிய பாத்திரங்களில் சமைக்கப்பட்ட இறைச்சி பிரித்து வைக்கப்பட்டிருந்தது. இதுபோலவே பெரிய பாத்திரத்தில் புரோட்டாக்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அதிகாரி விசாரித்த போது, முந்தைய நாள் மீந்து போன பழைய கோழி இறைச்சியை குழம்பில் இருந்து பிரித்து எடுத்து, விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதுபோலவே மீந்து போன புரோட்டாவை, மீண்டும் தோசைக்கல்லில் போட்டு சூடுபடுத்தி விற்பனைக்கு வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 2 கிலோ கோழி இறைச்சி, 8 கிலோ புரோட்டா ஆகியவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு அதிகாரி, அவற்றில் பினாயில் ஊற்றி அழித்தார். பழைய உணவுகளை சூடுபடுத்தி விற்பனை செய்த ஓட்டல் உரிமையாளர்கள் வினோத், முருகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, தலா ரூ.2ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

குட்கா விற்றால் ரூ.1 லட்சம் அபராதம்

பள்ளிபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் கூறுகையில், ‘உணவு பாதுகாப்பு துறையின் புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், குற்றம் முதல் முறையாக இருப்பின் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்திய நாளில் இருந்து 15 நாட்கள் கடை மூடப்படும். 2ம் முறையாக விற்பனை செய்து பிடிப்பட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, 30 நாட்கள் கடை திறக்க தடை விதிக்கப்படும்.

3வது முறையாக குற்றம் செய்தால் ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, 90 நாட்கள் கடை சீல் வைக்கப்படும். மேலும்ரூ.500 உறுதிமொழி பத்திரமும் தாக்கல் செய்யப்பட வேண்டும். எனவே, கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை அனைவரும் கைவிட வேண்டும்,’ என்றார்.

The post ஓட்டலில் மீந்து போன கோழி இறைச்சி, புரோட்டா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Namakkal District ,Pallipalayam Food Safety Department ,Officer ,Ranganathan ,Dinakaran ,
× RELATED ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரியில்...