×

திருக்கோவிலூர் அருகே காணாமல் போன பெண் கிணற்றில் சடலமாக மீட்பு

*போலீசார் தீவிர விசாரணை

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அருகே காணாமல் போன பெண் அதே பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அப்பனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் பாபு மனைவி ரம்யா (23). இவருக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே கடந்த ஒரு மாதமாக கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வெளியே செல்வதாக ரம்யா கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் மீண்டும் அவர், வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து ரம்யாவின் மாமனார் பழனி அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் தனது மருமகளை காணவில்லை என்று புகார் அளித்தார்.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள பாண்டுரங்கன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ரம்யா இறந்த நிலையில் மிதந்துள்ளார். இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து, அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அரகண்டநல்லூர் போலீசார், திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய மற்றும் மீட்பு துறையினர் உதவியுடன் பிரேதத்தை கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருக்கோவிலூர் அருகே காணாமல் போன பெண் கிணற்றில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tirukovilur ,Thirukovilur ,Rajesh Babu ,Ramya ,Appanandal village ,Villupuram district ,
× RELATED கிணற்றில் மூழ்கி அக்கா, தம்பி சாவு