×

4 வயது மகனை கொன்றதாக பெங்களூரை சேர்ந்த பெண் தொழிலதிபர் கைது..!!

பெங்களூரு: 4 வயது மகனை கொன்றதாக பெங்களூரைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் சுசானசேத் (39) என்பவர் கைது செய்யப்பட்டார். மைண்ட்ஃபுல் ஏஐ லேப் என்ற புத்தொழிலைத் தொடங்கி அதன் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பவர் சுசானா சேத். சில நாட்களுக்கு முன் கோவாவுக்கு மகனுடன் சென்ற சுசானா, சோல் பன்யான் கிராண்ட் நட்சத்திர குடியிருப்பில் தங்கினார். குடியிருப்பை நேற்று காலி செய்துவிட்டு சுசானா மட்டும் 4 வயது மகனில்லாமல் வாடகை காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டார். மகனை உடன் அழைத்துச் செல்லாததால் சந்தேகம் அடைந்த நட்சத்திர குடியிருப்பு ஊழியர்கள் போலீசுக்கு தகவல் தந்தனர்.

The post 4 வயது மகனை கொன்றதாக பெங்களூரை சேர்ந்த பெண் தொழிலதிபர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Susanaseth ,Bangalore ,Susanna Seth ,Mindful AI Lab ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்