×

இந்தியாவே வியக்க வெற்றிகரமாக உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடந்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்தியாவே வியக்க வெற்றிகரமாக உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடந்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். திட்டங்கள், முதலீடு ஈர்ப்பில் மிகப்பெரிய பாய்ச்சல்தான் உலக முதலீட்டாளர் மாநாடு எனவும் திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு இளைஞர்களும், மகளிரும் உயரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது; “சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்தியாவே வியக்க வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

இருநாள் மாநாடு, 20,000 தொழில்துறைப் பிரதிநிதிகள் பங்கேற்புடனும், 39 லட்சம் மாணவர்கள் பார்வையிடவும் பல புதுமைகளோடு தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களைப் பறைசாற்றி நடந்தேறியுள்ளது. நமது திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு இளைஞர்களும், மகளிரும் உயரும் திட்டங்களையும் செயல்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

அதில் மிகப்பெரிய பாய்ச்சல்தான், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு. ‘எல்லோருக்கும் எல்லாம்’, ‘எல்லா மாவட்டங்களுக்குமான பரவலான வளர்ச்சி’ என்ற நமது பயணத்தில் இது முக்கிய மைல்கல்” என தெரிவித்துள்ளார்.

The post இந்தியாவே வியக்க வெற்றிகரமாக உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் நடந்துள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : India ,World Investor Conference ,Chennai ,Chief Minister ,K. Stalin ,MLA ,Dravitha model government ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...