×

பெரியகுளத்துப்பாளையம் சந்தை பகுதியில் வாகனபோக்குவரத்து முறைப்படுத்த வேண்டும்

 

கரூர், ஜன.9: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரியகுளத்துப்பாளையம் வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் இருந்து பெரியகுளத்துப்பாளையம் செல்லும் சாலையோரம் ஞாயிறுதோறும் வாரச்சந்தை செயல்படுகிறது. கரூர், வெங்கமேடு, குளத்துப்பாளையம், வாங்கப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த வாரச்ந்தைக்கு வந்து தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

வாரச்சந்தை நடைபெறும் சாலையில், வெங்கமேடு பகுதியில் இருந்து இனாம்கரூர், குளத்துப்பாளையம், பெரியகுளத்துப்பாளையம், சேலம் பைபாஸ் சாலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த சாலையின் வழியாக செல்கிறது.வாரந்தோறும் பல ஆண்டுகளாக இந்த வாரச்சந்தை நடைபெற்று வரும் நிலையில், வாகன போக்குவரத்துக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

சந்தை நடைபெறும் நாட்களில் வாகனங்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையே இந்த பகுதியை கடந்து சென்று வருகின்றன.எனவே இது போன்ற நாட்களில் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் வாகன போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு, எளிதான வாகன போக்குவரத்து நடைபெறும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெரியகுளத்துப்பாளையம் சந்தை பகுதியில் வாகனபோக்குவரத்து முறைப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Periyakulamthupalayam ,Karur ,Periyakulatupalayam ,Karur Corporation ,Vengamedu ,Periyakulatuppalayam ,Kulatuppalayam ,Vangapalayam ,Dinakaran ,
× RELATED செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்