×

மாற்றுத்திறனாளிகள் 25 பேருக்கு ரூ.3.38 லட்சம் ஸ்மார்ட் போன்: கலெக்டர் வழங்கினார்

 

விருதுநகர், ஜன. 9: விருதுநகரில் மாற்றுத்திறனாளிகள் 25 பேருக்கு ரூ.3.38 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் போன்களை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு, முதியோர், விதவை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தினார்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 25 பேருக்கு ரூ.3 லட்சத்து 38 ஆயிரத்து 725 மதிப்பிலான இலவச ஸ்மார்ட் போன்களை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் தண்டபாணி, நேர்முக உதவியாளர் முத்துக்கழுவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

The post மாற்றுத்திறனாளிகள் 25 பேருக்கு ரூ.3.38 லட்சம் ஸ்மார்ட் போன்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Collector ,Jayaseelan ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்