×

எண்ணூரில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நவீன ஓய்வுஅறை

திருவொற்றியூர், ஜன. 9:எண்ணூர் மாநகர பேருந்து நிலையம் மற்றும் பணிமனையில் தொழிலாளர்களுக்கான ஓய்வு அறை பழுதடைந்ததால் புதுப்பித்துத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ₹3 லட்சம் செலவில் ஓய்வு அறை புதுப்பிக்கப்பட்டது. குளிர்சாதன வசதி, நவீன கழிவறை போன்ற அனைத்து வசதியுடன் ஓய்வு அறை கட்டமைக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்ததையொட்டி இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. கே.பி.சங்கர் எம்எல்ஏ கலந்துகொண்டு ஓய்வு அறையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் கோமதி, சந்தோஷ், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் கலந்து கொண்டனர்.

The post எண்ணூரில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நவீன ஓய்வுஅறை appeared first on Dinakaran.

Tags : Ennoor ,Tiruvottiyur ,Ennur ,Ennore ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...