×

பாளை அருகே தோட்டத்தில் நீர்மூழ்கி மின்மோட்டார் திருட்டு

நெல்லை, ஜன. 9: பாளை அருகே விவசாயின் தோட்டத்தில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நீர்மூழ்கி மின் மோட்டாரை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பாளை கேடிசி நகரை சேர்ந்தவர் சுப்பையா (81). விவசாயியான இவருக்கு சொந்தமான தோட்டம் மூன்றடைப்பு அருகே மருதகுளம் விலக்கில் உள்ளது. இரு நாட்களுக்கு ஒரு முறை தோட்டத்திற்கு சென்று பார்வையிட்டு வரும் இவர், வழக்கம்போல் கடந்த 7ம் தேதி காலை தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கிருந்த பம்பு செட் கிணற்றுக்குள் இருந்த நீர்மூழ்கி மின்மோட்டார், காப்பர் வயர் ஆகியன மாயமாகி இருந்தது. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிந்து, நீர்மூழ்கி மின் மோட்டாரை திருடிச்சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

The post பாளை அருகே தோட்டத்தில் நீர்மூழ்கி மின்மோட்டார் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Palai ,Nellie ,Subpaiah ,Palai KDC ,Dinakaran ,
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...